Monday, October 27

எழுதா கவிதைகள் சொல்லும் புத்தகமே!

Mar 17` 2014


"ஒரு முறை உச்சி முகர்ந்தேன் - அது 
உயிர் வரை உரசிப் போனதே..,
மறு முறை மறுத்தும் வேண்டினேன் 
மீண்டும் உயிர் திரும்பிடவே, 
விடிவது வாடிக்கை யானது - இன்னும் 
அரை நொடி வேண்டுமே..,
வெட்கம் விடுத்து பக்கங்கள் புரட்டு
எழுதா கவிதைகள் சொல்லும் புத்தகமே."

.....

இசைக்கு வரிகளா, வரிகளுக்கு இசையா
வரிசை கட்டி எழுதி தருகிறேன் ..,

இசைக்க யார் தயார்?

எழுத்தோலை!

முனிவரும் இனி..

Mar 15` 2014


கடைதெரு பிள்ளையார் கூட
கண்கள் உருட்டி பார்த்திட கூடும்,
தவத்தில் இருக்கும் முனிவரும் இனி
மௌனத்தை கலைத்திட தூண்டும்,

மேகம், மின்னல், மழை மூன்றும்
ஒன்றாய் சேர்ந்திடும், பேசிடும்....,
மோகம் மூடும், மௌனம் விலகும்
மொத்தம் அழகின் சங்கமம் உன்னில்,
முக்கூடல் சுழல் என்னில்,
அலை மோதி மீதமின்றி தொலைந்தேன்,
போடி எல்லாம் உன்னாலே
இந்நாள், நானும் இல்லாமல் போனேனே...,

கடைதெரு பிள்ளையார் கூட
கண்கள் உருட்டி பார்த்திட கூடும்,
தவத்தில் இருக்கும் முனிவரும் இனி
மௌனத்தை கலைத்திட தூண்டும்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616997871725424/?type=3&permPage=1

தேவர் உலக அமிர்தமாய் !

Mar 15` 2014


தேன் மதுர சுவைக்கீடாய்,
தேவர் உலக அமிர்தமாய்
கண்டிப்பாய் உன்னிதழும்
இருந்திடக் கூடும்..,

எட்ட இருந்து பார்திடவே
கட்டி கரும்பாய் இனிக்குதடி,
தொட்டு மட்டும் பார்த்துவிட்டால்
என்னுயிரும் உடலை பிரியுமடி.

எழுத்தோலை!

Sunday, October 26

அவள் அன்னையும் செய்தது..!

Mar 14` 2014


பாம்பல்ல அதுவும்,
ஓடும் நதியுமல்ல,
நீர் திவலைகள் முளைக்கும்
மலையுச்சியும் அல்ல,
மயிர் இருக்கும் - இருந்தும் 
இல்லாதுப் போல் வழுக்கும்..,

வளைந்து, நெளிவது,
வெண்ணிலவின் தெளிவது,
தேனீக்கள் கூடது,
கிளிகளும் தேடுவது,
தொட்டால் சுடுவது,
கண்களுக்கு குளிரது,

இடையது,
என்னவள் இடையது..,
எனக்கெனவே
அவள் அன்னையும் செய்தது,
வளைவது, நெளிவது
என்னையும் வாட்டி, வதைப்பது
தொட்டால் சுருங்கும் மலரது
எனக்கு மட்டுமானது..,
இடையது, என்னவள் இடையது,
எனக்கென்றும் இனியது.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616436948448183/?type=3&permPage=1

ஒற்றைக்கால் கொக்காய்..!

Mar 14` 2014


நதி
அதில் நீந்தும்
மீனும்,
முதலையும்..,

சகியே,
நதியே.....,
உன்னில்
நானும் நீந்தவே ..,
மீனவதாரம் எடுக்கவா...?
இல்லை,
முதலையாய் மீண்டும்
பிறக்கவா ..?

இரண்டினில் ஒன்று
ஏதேனும் பார்த்திடவே..,
நொடிகள் சிறிதும் - என்
கண்கள் இரண்டை
மூடிடா நிற்கறேன்..,
ஒற்றைக்கால் கொக்காய்..,
விடாப்பிடியாய்..,
விரும்பிய விதியால்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616417181783493/?type=3&permPage=1

இருட்டு ஒரு பொருட்டாய் இல்லை !

Mar 14` 2014


இருட்டு 
ஒரு பொருட்டாய் இல்லை.., 
அவள் இடை 
மெழுகில் செய்ததால்.., 
என் விரல்கள் அதில் 
படர்ந்திட்ட தருவாயில்..,
பரவிய வெளிச்சம்,
அவள் முகம் - அதில்
மின்னிய விளக்கு
திரியாய் தெரிய...,
இருட்டு
ஒரு பொருட்டாய் இல்லை
எங்களுக்கு.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616377965120748/?type=3&permPage=1

அதிகாலையில் சுபம்!

Mar 10` 2014


தாமரை இலை மேல்
தண்ணீர் துளிகள் - அவள்
கீழ் இதழ் ஓரமாய் ...,
சக்கரை துகள்கள் - இனிப்பு,
எறும்புக்கு மட்டும் அல்ல 
எனக்கும் பிடித்ததே,

தேநீர் கோப்பை,
துயில் நீங்கா படுக்கை,
நான், அவள்...,
இதழ்கள் பரிமாற்றம்
இனிமையின் அரங்கேற்றம்..,
அதிகாலையில் சுபம்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616368121788399/?type=3&permPage=1

எழுவர் விடுதலை உறுதி பெரும்..!

Mar 11` 2014


சினம் கொண்டு எழும் அரிமா அடங்காது - தன்
இனம் பசித்து கிடக்கும் நிலைக் கண்டு,
சினம் கொண்டு எழும் அரிமா அடங்காது - தன்
இனம் பசித்து கிடக்கும் நிலைக் கண்டு,

அறிவால் ஒரு நிலை மேல் கொண்ட தமிழா(மனிதா),
உன்னினம் மடிந்து வீழ்ந்ததை கண்டும்,
பெண்ணினம் கர்பிழந்து உருக்குலைந்ததை கேட்டும்,
துளியும் கலங்காத உன்னிலையே துரோகம்..,

வெகுண்டெழ வேண்டாம் - நின்று
வேடிக்கைப் பார்க்காதிருந்தால் போதும்,
வெடிகுண்டுகள் வீச வேண்டாம் - நீயறிந்த
அவலங்களை நாடறிய செய்தால் போதும்,

உண்மை நிலை உலகும் அறிய,
உண்ணாநிலை போராட்டங்கள் தொடரும்
உயிரையும் பொருட்படுத்தா மாணவர்கட்கு
உறுதுணை நின்றாலே போதும்..,

தமிழ் வெல்லும், தமிழீழமும் பிறக்கும்
எழுவர் விடுதலை உறுதி பெரும்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./614822355276309/?type=3&permPage=1

ஒவ்வொன்றும் அழகோ அழகு..!

Mar 09` 2014


இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு,

கன்னம் உரசி காதினை மறைக்கும் 
உன் கார்குழல் அழகு,
செவ்விதழ் மறைக்கும் செவ்விதழ் சாயம்
சிலிர்த்திட செய்யும் அழகு,
புருவம் வளைந்து கார்முகில் ஆகவே
கச்சித பொருத்தம் அழகு,
கோதுமை நிறம் தங்கமாய் மின்னும்
தமிழச்சி உன்மேனி அழகு,

ஒவ்வொன்றாய் சொல்லிடவே ஆசையும் கூடுதே
அதற்கு என் இச்சென்மமும் போதாதே..,
இன்னும் ஏழு வேண்டுமே, மீண்டும்
மீண்டும் பிறந்து சொல்லிடவே,

இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613878338704044/?type=3&permPage=1

நெசமா யோசிக்கல ..

Mar 08` 2014



பெண்களின்றி கவிஞனும் கிடையாது, 
பெண்களின்றி கவிதையும் நமக்கேது.., 
பெண்ணும் கவிதையும் ஒன்றாம் 
பெண்ணே கவிதையே அழகாம்.

பெண்கள் தின சிறப்பு பாடல்/ கவிதை.
-----------------------------------------------------

நெசமா யோசிக்கல ...
-------------------------------

பல்லவி:

மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல
அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

சரணம்:

வரப்பு வயலோரம் வாய்கா நடுவோரம்
எத்தி, எத்தி நடந்தவள ....,
சுத்தி, சுத்தி ஒளிஞ்சிருந்து ரசிச்சிருந்தேன்
கண்ணிமைக்கா மணிக்கணக்கா பார்த்திருந்தேன்..,
ஏபுள்ள எழுமிச்ச நெறமுள்ள மொசபுள்ள
ஏர் உழ மண்ணில்ல என் மனம் நீ உள்ள
மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல ...,

பல்லவி (2)

அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

சரணம் (2)

கருவேலம் காட்டுக்குள்ள குருவி சத்தம் காதினிக்க
கருவிழிக்காரி நீ சிரிக்க அத மறந்தேன்.,
நெல் கதிர் மேல கிளிகள் கூட்டம், கொஞ்சும் கீதம்
மயில் நடையா நீ வரவே கொஞ்சம் சிலிர்த்தேன்..,
வாத்துக கூட சேத்தினில் நடனம், நடவும் ரசிக்கும்
வஞ்சி நீ வந்திடவே நெஞ்சம் குளிர்ந்தேன்..,
எனை மறந்தேன், எதுவும் தோனலயே
மூளயும் யோசிக்கலயே..,
நெசமா என் மூளயும் யோசிக்கலயே..,

பல்லவி (3 )

மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல
அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613185708773307/?type=3&permPage=1

பெண்மையை போற்றுவோம்..

Mar 08` 2014


அடக்கம், அடக்கும், ஆளுமை, அன்பும்
உணர்வும் ஒளிப்படர் மதிமுகமும் ,
ஒருங்கிணைந்த உருவம் ஓர் உருவம் 
அவள் பெண்ணெனும் தவம்.., 

தவமாய் தவமிருந்தாலும் தலைக்கீழ் நின்றாலும்
தாயாய் ஆணாக முடியாது,
அவள் வலிகள் சுமந்திட முடியாது,
அதை உணரவும் வழியேது..,

வழி போகும் வழியெல்லாம் காணும்
விழி அதுவும் காணும்,
பெண்கள் எல்லாம் பெண்கள் அல்ல
நல்ல விழிக்கொண்டு கண்டால்..,
பெற்ற தாயும், உடன் பிறந்தவளும்
உற்ற தோழியும் அவளே..,

அவளே நம் குலம் காப்பவள் ,
அவளே வணங்கும் கடவுள்,
அவளே அன்பையும், அறிவையும் கொடுத்தவள்,
அவளே பெண்ணெனும் குறள்..,

பெண்மையை போற்றுவோம்..,
கண்களாய் அவர்களை காத்திடுவோம்.

"இனிய மகளிர் தின வாழ்த்துகள்..,"
அன்பு சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612908152134396/?type=3&permPage=1

வென்றிடா உறங்கோம்..!

Mar 06` 2014



தாமரை மலரும், சூரியன் உதிக்கும், 
துடைப்பம் சுத்தம் செய்யும் - இவை
மூன்றும் இலையின் கீழ் இல்லாமல் போய்விடும் - என
சூளுரைக்கும் ஆளும் கட்சிக்குமிது பொருந்தும்,

நோட்டா இரைத்தாலும் நோட்டா இருக்க
நோகாது நொங்கு திங்க இயலாது.., - இங்கு
இலையும் கிளைகளின்றி காய்ந்து உதிரும்
தாமரையும் தண்ணீரின்றி கருகி கவிழும்..,

அடிமேலடி செருப்படி வாங்கியவன் வாக்காளன்,
வக்காலத்து வாங்க, வாய்க்கு வந்த வார்த்தைகளை
வாரியிறைத்து வாக்கு சேகரிக்க வருபவன் வேட்பாளன்.,
அவனையே நம்பி குடும்பம் மறக்கும் அவனடித்தொண்டன்,

மதியிழந்து கிடந்த நாட்களும் அன்று,
விதியென்று வாழ்ந்த காலமும் சென்றது,
இனியொரு விதி செய்திட விழுந்தோம்
வீதிகளில் எங்கள் போராட்டங்களால் வென்றோம்...,

இளந்தலைமுறை மொழியின உணர்வாளர்கள் நாங்ளே,
எங்களை தட்டி எழுப்பியது என்னவோ நீங்களே.,
வெல்ல துடிப்பது எங்கள் போராடும் குனமொன்றே
வென்றிடா உறங்கோம் தழீழம் நமதே.

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612148192210392/?type=3&permPage=1

அன்றே பௌர்ணமியோ ?

Mar 06` 2014


கருமை கடலையும் மறைக்கும்
இருள் சூழ்ந்த நொடியில்..,
பருவம் வந்த பெண்ணும் - தன்
புருவம் உயர்த்தி சிரித்தால்

அன்றே பௌர்ணமியோ ?
 
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612096348882243/?type=3&permPage=1

தாமத இரவிலும்..

Mar 04` 2014


நினைவுகளை இனுக்கி, இனுக்கி இறுக்கி
வைத்துக்கொள்கிறேன் என்னுளங் கையில்.,
இம்மியளவும் பிசகா சருகாய் காயும்
தருவாயில் கூடத் தவறவிடா - தளரா
மனங்கொண்டே தாமத இரவிலும் உறங்கா 
உறுதியாய் உள்ளடக்கிய உயிராம், உயிரே
உறவாய் உனக்கொண்ட உரிமையில்..

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611195898972288/?type=3&permPage=1

நிழல் கூட மெல்ல துரத்தும்...

Mar 04` 2014


குறுஞ்செய்தி கவிதையில் ஒன்றாய், உனக்காய் 
மொத்தமாய் மூன்றே வரியில் முடித்திட 
எத்தனித்தே எண்ணி, எண்ணி என்னையும் 
இழந்தேன் ஏழெட்டு வரிகளில்.., 

"நீ, நிஜமாய் தெரியும் வெளிச்சம் - மதி
உன்னால் தானே வானிலே நிற்கும்..,
நிழல் கூட மெல்ல துரத்தும் - உன்
அருகாமையில் அகல் விளக்கும் ஒளிர...,
ஒளி ஒளிந்துக்கொள்ளும் இடுக்கில் தொங்கல்
தொங்கும், சிணுங்கும், மினுங்கும்..,
கற்றை குழல் உரச கார்முகில்
அருகாமையில் மறைந்து சிரிக்கும்,"

குறுஞ்செய்தி கவிதையில் ஒன்றாய், உனக்காய்
மொத்தமாய் மூன்றே வரியில் முடித்திட
எத்தனித்தே எண்ணி, எண்ணி என்னையும்
இழந்தேன் ஏழெட்டு வரிகளில்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611174268974451/?type=3&permPage=1

மகிழ்வு, எங்களுக்கும் உரித்ததே!

Mar 04` 2014


கோடிட்ட இடத்தை நிரப்புனீர் அன்று 
பள்ளியில் புள்ளி மான்கலென..,
கேள்வியும் இதுவாய் தானே இருந்தது 
சிறுத்தையை விட வேகமாயோடும்..,

ஓடும் அதிவேகம் தாவி வளைந்து,
தன் இலக்கை தவறவிடா,
சிறுத்தையும் சிரத்தையும் எண்ணா, உண்ண
இன்னொரு உயிர் தேடலில்..,

தேடும் இடம் அடர் வனம்
அது ஒருக் காலம் - புதர்கள்,
புல்வெளிகள், வான் மறைத்த மரங்கள்
எங்கள் இனங்களின் புகலிடம்..,

புகலிடம் புது இடமாய், மாயமாய்
புது, புது வீடுகளாய் - இன்று
மரங்களை காணோம், மலைகளை காணோம்
எங்கள் சந்ததிகளும் காணோம்..,

காணாமலே இன்னும் சில காலங்களில்
நாங்களும் போய் விடுவோமோ,
நாளை பிள்ளைகளும் எங்களை எட்டில்
பார்த்தே எண்ணங்களில் மகிழ்வாரோ..,

மகிழ்வு, எங்களுக்கும் உரித்ததே உணர்வீரோ
எங்களுக்கும் உணர்வுண்டு அறிவீரோ,
நாங்களும் உயிர்களே, உறவுகளே கருணையுடன்
எங்களயும் பார்ப்பீரோ இனியேனும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611123258979552/?type=3&permPage=1

பற்கள் வழி கடந்து விழும்..!

Mar 01` 2014


நற்றிணை நலம் தரும் நயமாய் 
நிதம் கேட்டிட தூண்டும் - உன் 
பற்கள் வழி கடந்து விழும் 
சொற்கள் ஒன்றும் ஒவ்வொன்றும்..,

ஒவ்வொரு மொழி அழகை மொத்தம்
கொண்டே முத்தயிதழ் வழி – காற்றில்
பரவி என் சித்தம் நனைத்து - சத்தம்
குறைத்து சலசலப்பை நிறைக்கும்..,

நிறைந்தும் நிற்காமல் நீந்தி கடந்து
நிறைமதி ஒளியாய் சிரிக்கும் – போதும்
புன்னைகை அரசியே என்னையும் விடு
விடியும்முன் விழித்துக் கொள்கிறேன். 


https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./609637789128099/?type=3&permPage=1

தேகம் மெலிந்து கொடியாய் சிறுத்தே..!

Feb 26` 2014



நிறைவேறாத ஆசைகள் போலவே நீயும்,
நினைவில் வடித்த சிலையாய் நானும்..,

நீயே ஆசையே, என்னுள் தினம் 
அசையும் அசைவே அழகே..,
அனுதினம் ஆர்ப்பரிக்கும் அணுவே,
என்னுள் இருந்தே எனை தின்றே
எனை இயக்கும் இசையே,
இன்றெங்கே நீயும்சென்றாய் மறைந்தே..,
தேடும் திசையே மறந்தேனடி
தேகம் மெலிந்து கொடியாய் சிறுத்தேனடி
விதியே நம்மை பிரிதிடினும் - நாம்
மதி இழந்தா மயங்கி கிடந்தோம்.

நிறைவேறாத ஆசைகள் போலவே நீயும்,
நினைவில் வடித்த சிலையாய் நானும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./608111382614073/?type=3&permPage=1

இயற்கையை காப்போம், இனிமையை மீட்போம்.

Feb 26` 2014



இயற்கையை காப்போம்!
-----------------------------------

இந்த புவி இன்று 
புதுமைகளை கண்டதெல்லாம் 
உன்னால் தான் மனிதா..,
வானளாவிய கட்டிடங்களும் - அதற்கு
மேலே கூர்த்தீட்டி நிற்கும்
அலைவரிசை கோபுரங்களும் சாத்தியமானது
உன்னால் தான் மனிதா...,
எங்கு பார்க்கினும் பறந்துக்கொண்டிருக்கும்,
சாலைகளில் எல்லாம் விரைந்துக்கொண்டிருக்கும்
வான் ஊர்திகளும், வாகனங்களும்
உலவிட ஊர் கடந்திட உதவியது
உன் திறமை தான் மனிதா..,
இன்னும் பல பிரம்மாண்டங்கள்
வியக்க வைக்கும் அதிசயங்கள் எல்லாம்
உன்னால் தான் மனிதா...,

இவையாவும்,
இன்றைக்கு இல்லாமல் இருந்திருந்தால்
இந்த பூமி தோன்றியதைப் போலவே
பசுமையாய் சிரித்திருக்கும்...,
எங்கு காணினும் கழிவுகள் இன்றி
இன்னும் வளமாய் தன்னை கொண்டிருக்கும்...,
வற்றாத ஆறுகள் இன்னும் கிடைத்திருக்கும்...,
பொங்கும் சமுத்திரம் விழுங்கா - பல
நிலங்கள் இன்றும் இருந்திருக்கும்..,
மரங்களே மண்ணை காத்திருக்கும்...,
அதன் பரப்பில் அன்று வாழ்ந்த
டைனோசர்களும், மமூத் யானைகளும்,
ஏட்டினிலும், கணினியிலும்
காணும் இன்னும் பல உயிரினங்களும்
இன்றும் வாழ்ந்திருக்கும்..,
பறவைகளும் மகிழ்ந்திருக்கும்...,

எல்லாம் போனது மனிதா ...
ஏட்டு சுரைக்காய் வைத்துக்கொண்டு
பசிக்கிறது என்பதில் பலனென்ன நண்பா..,
இழந்தவை மீள்வதும்,
இறந்தவர் சிரிப்பதும் சாத்தியம் தானா
இருப்பதை நாளையும் இருந்திட செய்வோம் - இனி
எஞ்சி இருப்பதையாது அடுத்த தலைமுறைக்கு
விட்டுவைப்போம்.., புவியை காப்போம்
நம்மால் முடிந்தவரை மரங்களை வளர்ப்போம்,
இயற்கையை காப்போம், இனிமையை மீட்போம்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./608050309286847/?type=3&permPage=1

உயிர்வலி மட்டும் என்னுள் மிச்சம்..

Feb 25` 2014


உண்மையில், உண்மையில் உயிராய் இருந்தேன்,
உனையே, உனையே உறவாய் நினைத்தேன்,
உயிரே, உயிரே எனையும் பிரிந்தாய்
உடலையும், உயிரையும் தீயால் சுட்டாய்,
ஒரு நொடி கூட என் காதலை அறியா 
எங்கோ இருந்தே என்னையும் கொன்றாய்...,

உண்மை காதல் உன் காலடி மண்ணில் கலக்க
உயிர்வலி மட்டும் என்னுள் மிச்சம்..,
உயிர்த்தெழ ஒருமொழி போதும் அன்பே
உன்னிலே என்றும், இரத்தநாளங்கள் அதன் அணுவில்,
ஏதோ ஒரு மூலையில் - ஒட்டி
இருந்தேனும் எஞ்சிய காலம் கழிப்பேன்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./607620049329873/?type=3&permPage=1

நளினம், நடனம் !

Feb`17 2014


நிறைந்த நீர் குவளைப் போல் 
நெளிந்து என்னை ஈர்க்கும் 
அவள் இடையும் அது உடையும் 
நடையும் நளினம், நடனம்.

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./603154616443083/?type=3&permPage=1

தவமாய் பெற்ற தவப்புதல்வன்..!

Feb`13 2014


காட்சிகளை வெறும் காட்சிகளாய் 
காணும் கண்களும் வருந்தும்,
இனியும் ஒளி, உறையும் பனியாய்
மறைக்கும் கண்களில் உணர்சிகளை,

இவன் இருந்தான் சுருள் மகிழ்ந்தது
இனி மறைந்தான் இருள் சூழ்ந்தது..,
துல்லியம் தெரியா துள்ளித்திரியும்
துணை இயக்கம் துள்ளல் முறிந்தது,

ஆசானாய் அள்ளி, அள்ளி வழங்கிய
யோசனைகளை எல்லாம் இனி யார்தருவர்..,
எங்கும் சுழலும் சுருள்சக்கரம் காட்டும்
காட்சிகளும் கசக்கும், ஒளியுகம் சிரிக்கும்,
திரையுலகு தவிக்கும், தலைமுறைகள் ஏங்கும்..,
தவமாய் பெற்ற தவப்புதல்வன் உறங்கிடவே,

காட்சிகளை உணர்ந்த என் கண்கள்
இன்று கண்ணீரை உதிர்த்தப்படி ..

காட்சிகளை வெறும் காட்சிகளாய்
காணும் கண்களும் வருந்தும்,
இனியும் ஒளி, உறையும் பனியாய்
மறைக்கும் கண்களில் உணர்சிகளை.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./600644150027463/?type=3&permPage=1

ஓராயிரம் ஆண்டுகள்..!

Jan 24`2014


ககன(ம்)!
--------------

கானகம், வானம், சுவர்கம், 
செந்தணல், படைபலம், பறவையினம்,
இவையனைத்தும் ஒற்றை சொல்லில்
உந்தன் பெயரில் அடங்கிடுமெனில்..,

நான் மட்டும் எப்படி
உன்னில் அடங்காதிருப்பது,

அழகாய் சிரிப்பில்
சுவர்கத்தை காட்டி,
வானாய் அளவிடா
அன்பை ஊட்டி,
திசையறியா பறவையாய்
அமுதமொழி கூட்டி,
செந்தணல் கண்களால்
என்னையும் வாட்டி,
கானகமாய் விரிந்தாய்
என்னிதயம் புகுந்தாய்,
படைபலம் இல்லா
அரசனும் ஆனேன்,
உன்னன்பால் சிறைப்பட்டு
அடிமையாய் போனேன்,

சிறைப்பிடித்து என்னை
அழைத்துப்போ,
விடியும்வரை வதைத்து
உறங்கிப்போ,
சிறைப்பிடித்து என்னை
அழைத்துப்போ,
விடியும்வரை வதைத்து
உறங்கிப்போ,

வாழ்ந்து போகிறேன்
என்றென்றும் எனை இயக்கும்
உன்னிதய கூட்டில்
ஓராயிரம் ஆண்டுகள்.


எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./589840507774494/?type=3&permPage=1

சாதிகள் இல்லையடி பாப்பா!

Jan 17`2014



எதிர்வரும் ஞாயிறு அன்று,

கூடல் நகர் கவிஞர் பேரவை மற்றும் ஓவியன் கலைக்கூடம்!
(இடம்: காந்தி திடல், (கூடலூர், நீலகிரி மாவட்டம்), நாள்: 19.01.2014)

இணைந்து நடத்தும்
சமத்துவ பொங்கல் விழா கவியரங்கில்,

கொடுக்கப்பட்ட தலைப்புக்கு நான் வாசிக்க இருக்கும் கவிதை,

-----------------------------------------
சாதிகள் இல்லையடி பாப்பா!
-----------------------------------------

தீப்பிழம்பினும்,
விரைந்து அழிக்கும் இந்த தீ
ஒரு வியாதியே இச் சமூகத்தில்
பரிந்துரைக்கப்படாத மருந்துகள் போல்
சுயமருத்துவம் செய்துக்கொண்டு
தனக்கு தானே, தனித்தனியே ஆங்காங்கே
பிரிந்து விரிந்து அழித்துக்கொண்டிருக்கிறது..,
நம் சமூகத்தில்,
வறண்ட நிலத்தில் பிளந்துக் கிடக்கும்
மணர்குழம்புகள் போலே..,

சாதி என்கின்றனர்..,
சாத்தியக்கூறுகள் ஏதும் அறியா
சம்பிரதாய மடமை கயவர்கள்..,
வேதியல் மாற்றம்
உடல்ரீதியில் தெரிய
மனமுவந்து மனம் திறந்து
காதல் மலர்ந்து திருமணம் புரிந்து
புதியதோர் வாழ்வியல்
தொடங்கிடும் தருணமே
குறுக்கிடும் இந்த தீப்பிழம்பும்
பொசுக்கி விழுங்கிடும் கொடுமையும்
நிகழ்வதும் நீங்குமோ,

ஒதுக்கி, ஒதுக்கி,
ஒதுங்கி, ஒதுங்கி முழிப்பிதுங்கி
வழிப்பாதை, வழிப்பாடு ஆலை(யம்)
பாடசாலை நுழைந்திடா நாளை
சீர்த்திருத்திய பெரியார் - முதியவர்
முறிந்துப் போன முருங்கை கிளையாய்
என்றோ அவருடன் புதைத்துவிட்டு
ஒதுக்கினர்..,

இடமாம், ஒதுக்கீடாம்
பார்பனனாம், பறையனாம்
இதற்கு இடைப்பட்ட இடைசாதி
வன்னியனாம், தேவனாம் இன்னும்
நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்களால்
வீதிக்கொரு கட்சியாம்,
வீட்டுக்கொரு சங்கமாம்,

பள்ளியில் சேர்க்கையில்
விதைத்திடும் முதல் விதை
விண்ணப்ப தாளில் கேள்வியாய்
சாதியின் குறிப்பீடு - இதில்
சாதிக்கு ஏற்றவாறு மதிப்பீடு
திருந்துமோ அரசும்,
திருத்துமோ அதன் அரசாணையையும்,
அணைக்குமா சாதீய தீப்பிழம்பும்
அன்பால் அனைவரையும்
அரவணைக்குமோ இச்சமூகம்..,

குருதி ஒன்றெனில்
மனிதமும் ஒன்றே.
சாதிகள் இல்லையெனில்
சமூகமெல்லாம் சமமே,
இதை உணர்த்திட
உண்மையை உணர்ந்திட
ஒன்றினைவோம்
ஒர்குடைக்குள்,
ஒன்றே குலமென்ற
ஒருங்கிணைப்பில்,

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

எழுத்தோலை!

நீளும் எந்த பயணமும் ...

Jan 07th 2013


நீளும் எந்த பயணமும் 
நீ அருகில் இருந்தால் விருப்பம்,
வளைவும், நெளிவும் இருந்தும், 
ரயிலாய் நீ அழகாய் தெரிந்தும், 
உன் இடையோடு என் கைக்கோர்த்து 
நாம் நடைப்போடும் சந்தர்ப்பம்
அடியோடு நீ மறுக்கும் நாளும்
உன் அழகோடு உறவாடா - என்
உயிர் ஒருப்போதும் உறங்காது,

நீளும் எந்த பயணமும்
நீ அருகில் இருந்தால் விருப்பம்.


https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./580723705352841/?type=3&permPage=1